search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் எதிர்ப்பு"

    • வருவாய்த்துறை அதிகாரிகள் கொரட்டகிரி கிராமம் வழியாக கல்குவாரி டிப்பர் லாரிகளை இயக்கினர்.
    • 2-வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கொரட்டகிரி கிராமத்தில் 6 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன

    இந்த கல்குவாரிகளில் இருந்து ஜல்லிகற்கள் மற்றும் எம்.சாண்ட் ஆகிய கட்டுமான பொருட்களை ஏற்றி கொண்டு செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவா ர்த்தையை அடுத்து பொது மக்கள் போரா ட்டத்தை கைவிட்டனர்.

    அதனைத்தொடர்ந்து கல்குவாரி உரிமையாளர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    அவர்களின் மனுவை விசாரித்த நீதிமன்றம் கொரட்டகிரி கிராமத்தின் வழியாக சாலையில் டிப்பர் லாரிகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    மேலும் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பி ரண்டு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என கூறி இருந்தது.

    இதையடுத்து நேற்று தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, குமரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கொரட்டகிரி கிராமம் வழியாக கல்குவாரி டிப்பர் லாரிகளை இயக்கினர்.

    அப்போது கிராமத்தின் வழியாக சென்ற டிப்பர் லாரிகளை பொதுமக்கள் வழிமறித்தனர்.

    இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் சென்னை உயர்நீதிமன்ற ஆணையை காட்டி டிப்பர் லாரிகளை இயக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கூறினர்.

    ஆனால் பொதுமக்கள் லாரிகள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதி வழியாக டிப்பர் லாரிகள் செல்லாமல் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. இன்று 2-வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பொதும க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் இந்த போராட்டத்தால் கொரட்டகிரி கிராமத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கண்டரக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில்பழமை வாய்ந்த சிவன் கோவி ல்சோமநா தஈஸ்வரர்கோவில் உள்ளது.
    • நெடுஞ்சாலைத்துறையினர் வழங்கு வதாக அறிவிக்க ப்பட்ட நிதி பாதியாக குறைக்கப்பட்டது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கண்டரக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில்பழமை வாய்ந்த சிவன் கோவி ல்சோமநா தஈஸ்வரர்கோவில் உள்ளது. இந்த சிவன் கோவில் வளாகத்தில் விநாயகர்,முருகன், வீரப த்திரசாமி உள்ளிட்டசாமிசன்னதிகள் தனித்த னியாக அமைக்கப்பட்டிருந்தன. இந்து சமய அற நிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலை தற்போது சாலை விரிவாக்க பணிக்காக இடிப்பதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதற்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்க ப்பட்டதால் கடலூர் கலெக்டர்,பிஆர்ஓ உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். புதிதாக கோவில் கட்ட திட்ட அறிக்கையை தயார் செய்து நெடுஞ்சாலை துறைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து கோவில் கட்ட 80 லட்சம் வழங்க தீர்மானிக்கப்பட்டது இதற்கிடையில் நெடுஞ்சாலைத்துறையினர் வழங்கு வதாக அறிவிக்க ப்பட்ட நிதி பாதியாக குறைக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கிரா ம மக்கள் கோவில் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து பண்ருட்டி தாசில்தார் வெற்றி வேல், புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், நில எடுப்பு தாசில்தார் சாமிக்கண்ணு, நகாய் அலுவலர்கள்,ரிலையன்ஸ் அதிகா ரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம், கோவில் அறங்கா வலர்கள் ராமானுஜம் ரெட்டியார், தண்டபாணி, ஒன்றிய கவுன்சிலர் துரைராஜ், இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் வக்கீல் மதனகுரு, அதிமுக பிரமுகர் சேகர்,நாட்டாமை டெல்லி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் கலியபெருமா ள்,சிவபூஷணம் ஆறுமுகம் லட்சுமணன்,சரவணன் மற்றும் வியாபாரி சங்க பிரமுகர்கள் உள்ளிட்டோர் திரண்டனர். சுமூக முடிவு ஏற்படாததால்வருவாய் வட்டா ட்சியர் அலு வலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது என முடிவு செய்தனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×